Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

BCCI-ன் இடைக்காலத் தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!

மும்பை: BCCI-ன் இடைக்காலத் தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. BCCI-ன் தற்போதைய தலைவராக உள்ள ரோஜர் பின்னியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை அந்த பதவியில் ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ரோஜர் பின்னி, வருகிற ஜூலை 19ம் தேதி 70 வயதை எட்ட உள்ளார். இதனால் BCCI அரசியலமைப்பில் தலைவர் பதவிக்காக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை அவர் தாண்டுவார். இதன் காரணமாக BCCI-ன் இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகிற ஜூலை மாதத்தில் பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் சுக்லா 3 மாதங்கள் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் செப்டம்பர் மாதத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று BCCI- வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.