Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !

சென்னை : நடப்பு பருவமழையின் போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, நடப்பு பருவமழையின் போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையிலும்,

இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையிலும் “சென்னை – தாம்பரம் - ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்-துணைமேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்” 22.10.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர-நகர- பகுதி-வட்டக் கழகச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்"என்று கூறப்படுகிறது.