புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,500 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாக அதிகரிப்பு
சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,500 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 5,400 கன அடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு 2,500 கன அடியாக வெளியேற்றப்படுகிறது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 20.61 அடி வரை நீர்மட்டம் உள்ளது. உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

