டெல்லி: டெல்லி, பஞ்சாப், இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. பஞ்சாபில் கடந்த 25ஆண்டுகளில் இல்லாத வகையில் பெரும்மழை கொட்டியுள்ளது, 23 மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆம் மாநில அரசு அறிவித்துள்ளது. கனமழையால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மழைக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர் 3.30லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு படகுகள் மூலம் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். கனமழை காரணமாக பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 7ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டிருக்கிறது. ஹரியானாவில் பஞ்ச்குலா என்ற இடத்தில கார் மீது மரம் விழுந்ததில் நான்கு பள்ளி குழந்தைகள் காயம் அடைந்தனர். இமாச்சலில் பிரதேசத்திலும் மழை நீடிப்பதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. மரங்களும், கற்களும் விழுந்து கிடைப்பதால் மாநிலத்தில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மணாலி, லே தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஷிம்லாவில் முதலமைச்சர் வீட்டில் அருகிலேயே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
தலைநகர் டெல்லியிலும் மழை வெளுத்து வாங்கியது, யமுனை நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்கிறது. யமுனை கரையோர பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. விடுகளிக்குள்ளும், கடைகளில் குள்ளும், தண்ணீர் புகுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது, கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரிலும் கனமழை கொட்டிவருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உதம்பூர் - பரிகால் இடையே நிலச்சரிவு ஏற்படுத்திருப்பதால் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு இருக்கிறது. வெள்ளத்தில் தவிப்பவர்களை இந்திய ராணுவ மற்றும் தேசிய மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஜம்மு - கத்ரா இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா - சத்தீஸ்கர் மாநிலங்களிலும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பத்துள்ளது.