Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கடத்தூர் அருகே மயானத்திற்கு இடம் வேண்டி பொதுமக்கள் காத்திருப்பு

*அரசு நிலம் ஆக்கிரமிப்பால் வேதனை

கடத்தூர் : கடத்தூர் அருகே, அரசு நிலத்தில் இருந்து மயான பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளதால், இடம் வேண்டி பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், நல்லகுட்டல அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்டது நடூர் கிராமம்.

இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் இறக்கும் தங்களின் உறவினர்களின் உடலை, ஏரிக்கால்வாய் பகுதியில் அரசு ஒதுக்கிய நிலம் இருந்து வருகிறது. இங்கு இறந்தவர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மயானத்திற்கு செல்ல பஞ்சாயத்து நிர்வாகம் தார் சாலை அமைத்து கொடுத்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர், மயான இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனையடுத்து அரசு நிலத்தை மீட்டு மீண்டும் மயானத்தை பயன்படுத்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்துள்ளனர்.

இது குறித்து வருவாய் துறை அலுவலர் கூறுகையில், ‘நல்ல குட்லஅள்ளி, நடுர் உள்ளிட்ட அப்பகுதியில் இறந்தவர்களின் சடலத்தை புதைப்பதற்காக பாதை புறம்போக்கு நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர். ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தை அடுத்து, வருவாய்த்துறையினர் அகற்றி, அரசு நிலம் கையகப்படுத்தினர். தொடர்ந்து இருதரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்படும்,’ என்றனர்.