விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு வந்த 11-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
+
Advertisement