Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

டெல்லி: மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம்; தனது லட்சியங்களால் மனித வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த காந்திக்கு மரியாதை செலுத்துவோம். தைரியம் மற்றும் எளிமை ஒரு பெரிய மாற்றத்திற்கான கருவியாக மாறும் என நிரூபித்தவர்; மக்களுக்கு அதிகாரமளிக்க சேவை, இரக்கம் ஆகியவற்றை முக்கியமாக கருதியவர் காந்தி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.