Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இது மோடி 3.0 என்று சிலர் வர்ணிக்கிறார்கள், ஆனால் இது மோடி 2.1 போன்று தெரிகிறது :ப.சிதம்பரம்

சென்னை : நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் ஒரு பொறுப்பான மற்றும் விழிப்பான எதிர்க்கட்சியாகச் காங்கிரஸ் செயல்படும் என்று அக்கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மோடி அவர்களின் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. சிலருக்கு அவர்களிடம் இருந்த அதே இலாகாக்கள், சிலருக்குப் புதிய இலாகாக்கள் தரப்பட்டிருக்கின்றன. இது மோடி 3.0 என்று சிலர் வர்ணிக்கிறார்கள், ஆனால் இது மோடி 2.1 போன்று தெரிகிறது! அது எவ்வாறு இருந்தாலும், நம்மைப் பொறுத்த வரை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் ஒரு பொறுப்பான மற்றும் விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.