Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து புதிய உச்சம்!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.82,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் தங்கம் விலை கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.82,000 தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் பிறகும் விலை உயருமோ என நினைத்த நேரத்தில், கடந்த சில நாட்களாக சற்று குறைந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10-க்கும், சவரனுக்கு ரூ.80-க்கும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10, 230-க்கும், ஒரு சவரன் ரூ.81, 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன் மூலம் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ,82,320-க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.143-க்கும், ஒரு கிலோ ரூ.1, 43,000 விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.145-க்கும், ஒரு கிலோ ரூ.1, 45,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.