வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி விரைவில் நேரில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், டிரம்ப்-மோடி விரைவில் நேரில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மோடி-டிரம்ப் நேரில் சந்திப்பதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் நேர்மறையான உறவை கொண்டுள்ளனர். இந்தோ - பசிபிக் கூட்டமைப்பின் க்வாட் உச்சி மாநாட்டுக்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறலாம். டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன. இந்தியாவுடனான உறவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வாஷிங்டன் கருதுகிறது” என்றார்.
+
Advertisement