Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரசிதா சபரி படைத்துள்ள ஆங்கில கவிதை தொகுப்பு நூல் தி என்டாங்கிள்மென்ட் ஆப் இல்லூஷன்ஸ்: டிச.4ம் தேதி வெளியீடு

சென்னை: கலை மற்றும் கூர்ந்து ஆய்தலுடன் எழுதுபவர் பிரசிதா சபரி. தி என்டாங்கிள்மென்ட் ஆப் இல்லூஷன்ஸ் என்பது அவரது முதல் கவிதை தொகுப்பு நூலாகும். பாரம்பரிய இந்திய கைவினைகளை சமகால வடிவமைப்பில் கொண்டு வருவதற்காகப் பணியாற்றுகிறார். இவருடைய கணவர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணனுண்ணி. இவர் தன் மகள் மற்றும் தாயாருடன் சென்னையில் வசிக்கிறார். கருத்து, ஏக்கம் மற்றும் உண்மையின் தியான ஆய்வு குறித்த இந்த புத்தகம் தனிநபர்கள் தங்கள் சொந்த கற்பனைகளை எவ்வாறு உருவாக்குகிறார்கள், எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. தெளிவான மொழி நடையில், விழிப்புணர்வு சாதாரண அனுபவத்தை பிரதிபலிப்பாக எவ்வாறு மாற்றுகிறது என்பதை சபரி ஆராய்கிறார்.

பிரசிதா சபரி தனது படைப்புகளைப் பற்றி, ‘‘இந்தப் புத்தகம் பதில்களைப் பற்றியது அல்ல ஆனால் கேள்விகளுடன் இதயத்தில் நிலைபெறும் வகையில் கற்றுக்கொள்வது பற்றியது. மற்ற அனைத்தும் மறைந்து போகும்போது என்ன எஞ்சியிருக்கும் என்பதைப் பார்ப்பது” என்று குறிப்பிடுகிறார். சிங்கப்பூர் கவிஞர் ஜோசுவா இப், இந்த தொகுப்பிற்கான சுருக்கத்தை எழுதியுள்ளார். மேலும் படைப்புகளைப் பற்றி சபரி கூறும்போது, “இந்த நூலின் அட்டை படத்தை மணீஷ் திரிபாதி வடிவமைத்துள்ளார், இவர் AXIOM-4 விண்வெளி வீரர் பணிக்கான இந்தியாவின் சிறப்பு பேட்ஜை வடிவமைத்ததற்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். டிசி புக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும், ”தி என்டாங்கிள்மென்ட் ஆப் இல்லூஷன்ஸ்” சமகால இந்திய கவிதையில் ஒரு தனித்துவமான புதிய குரலை அறிமுகப்படுத்துகிறது. இது கலை துல்லியத்தை சிந்தனைத் தெளிவுடன் இணைக்கிறது. தி பிரசிதா சபரி ”தி என்டாங்கிள்மென்ட் ஆப் இல்லூஷன்ஸ்” என்னும் ஆங்கில கவிதை தொகுப்பு நூல் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியிடப்படுகிறது. இவ்வாறு பிரசிதா சபரி கூறினார்.