Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து 3200 கன அடி உபரிநீர் திறப்பு: நீர்வளத்துறை தகவல்

சென்னை: அணைகளின் பாதுகாப்பு கருதி பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 2000 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 600 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 600 கன அடியும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பியது.அதன்படி, நேற்று காலை 10 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 33.47 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2660 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 790 கன அடி மழைநீர் வந்து கொண்டுள்ளது.பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 47 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 21.79 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3064 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், ஏரியிலிருந்து வினாடிக்கு 600 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 19.40 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2892 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 295 கன அடியாக உள்ளது.

சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி விதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 600 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 15.01 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 676 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 34.70 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 437 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி 5 ஏரிகளில் தற்போது 9729 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக வழி நிலக்கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.