Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பூந்தமல்லி - போரூர் இடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் : திட்ட இயக்குனர் அர்ஜுனன் தகவல்

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்து சேவை தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் குறித்து பேசிய மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன், "மெட்ரோ 2ம் கட்ட வழித்தடத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கி.மீ.க்கு நடைபெறுகிறது.

பூந்தமல்லி - போரூர் இடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இதே போன்று போரூர் - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையேயும் கோயம்பேடு முதல் நத்தம்பாக்கம் வர்த்தக மையம் இடையேயும் 2ம் கட்ட மெட்ரோவின் மற்றொரு சேவை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

பூந்தமல்லி - போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் உயர்மட்ட பாதையாக அமைக்கப்பட உள்ளது. மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தடத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து 2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 6 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது."இவ்வாறு தெரிவித்தார்.