தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியில் படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போக்சோ வழக்கை பொம்மிடி போலீசார் பதிவு செய்தனர். இதில் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை சார்பாக தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கல்பனா (55) வழக்கை நடத்துவதற்கு புகார்தாரரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை, வழக்கறிஞர் கல்பனா வீட்டிற்கு சென்று ரூ.10 ஆயிரத்தை வழங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
+
Advertisement

