Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் துறை எச்சரிக்கை

சென்னை: போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ராயப்பேட்டையில் குடும்பப் பிரச்சினையில் 8 வயது சிறுமிக்கு தனது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தனர் .

இதை தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது தனது தாத்தா மீது எந்த தவறும் இல்லை. தனது அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் சண்டை ஏற்பட்டதில் மதுபோதையில் தனது தந்தை தாத்தாவை தாக்க முற்பட்டதாகவும், தன்னை பொய் சொல்ல வற்புறுத்தியதாகவும் சிறுமி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சிறுமியின் தாத்தா மீது தவறு இல்லை என தெரியவந்ததை அடுத்து அந்த குடும்பத்தை எச்சரித்து போலீசார் அவர்களை விடுவித்தனர்.

பொய் புகார் அளிக்கப்பட்ட 60 வயது முதியவர் உடனடியான காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு பராமரித்து வந்தனர். முதியவருக்கு மகனுக்கும் சொத்து பிரச்சனை இருந்ததாகவும் அவரது மகன் திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் வேலைக்கும் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி மொத்த சொத்துக்களையும் தனக்கு எழுதி தருமாறு மகன் தனது தந்தையிடம் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார்.

இதன் காரணத்தினால் தந்தை அவரை தாக்கமுற்பட்டதும் தெரியவந்தது. இந்த நிலையில், போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பவம் குறித்து பொய் புகார் அளித்த மகன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நீதிமன்ற ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போக்சோ பிரிவில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவு 22(1) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.