சென்னை: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னையில் நாளை நடைபெற இருந்த பாமக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை கண்டித்து ராமதாஸ் அணி போராட்டம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மழை காரணமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாமக தெரிவித்துள்ளது.
+
Advertisement

