சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கண்ணிகைப்பேர் பகுதியில் 12.4 ஏக்கர் நிலத்தை ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. ரூ.250 கோடி முதலீட்டில் ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனம் தொடங்கும் ஆலையால் 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களில் உலக அளவில் முன்னணி நிறுவனம் ஹெர்ரென்க்னெக்ட்.
+
Advertisement