Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வளர்ப்பு பிராணி விவகாரத்தில் சண்டையிட்டுக் கொண்ட பக்கத்து வீட்டுக்கார்கள் : ஆசிரம குழந்தைகளுக்கு பீட்சா, மோர் தர ஐகோர்ட் நிபந்தனை

டெல்லி : டெல்லியில் வளர்ப்பு பிராணி விவகாரத்தில் சண்டையிட்டுக் கொண்ட பக்கத்து வீட்டுக்கார்கள் மீதான வழக்கை ரத்து செய்ய டெல்லி ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. டெல்லியில் பக்கத்து வீட்டுக்காரர்களின் வளர்ப்பு பிராணி தொடர்பான சண்டை காவல் நிலையம் வரை சென்றது. இதையடுத்து இரு தரப்பு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தங்கள் மீதான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி இரு தரப்பினரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அருண் மோங்கா முன்பு விசாரணைக்கு வந்த போது, பிரச்னையை பேசி தீர்த்துக் கொண்டதாக இரு தரப்பும் தெரிவித்தது. இருவரின் சமாதானத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரு தரப்பு மீதான வழக்கை ரத்து செய்ய ஆசிரம குழந்தைகளுக்கு பீட்சா, மோர் தர நிபந்தனை விதித்தார். ஜிடிபி நகரில் உள்ள சங்ஸ்கர் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு பீட்சா, மோர் வழங்கப்பட்டதை உறுதி செய்ய காவல் நிலைய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.