Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் நாய்க் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் நாய்க் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த முகமது நஸ்ருதீன் (50) என்பவர் உயிரிழந்தார். கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை அருகே நாய் கடித்து முகமது நஸ்ருதீன் என்பவர் காயம் அடைந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் முகமது நஸ்ருதீன். கடந்த 12ம் தேதி மீண்டும் காய்ச்சல் வந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் முகமது நஸ்ருதீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.