பெரியம்மாபட்டியில் அரசு நிலத்தில் மின்வேலி அமைத்த வழக்கு: திண்டுக்கல் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை
மதுரை:பெரியம்மாபட்டியில் அரசு நிலத்தில் மின்வேலி அமைத்த வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. பழனி அருகே பெரியம்மாபட்டியில் அரசு நிலத்தில் மின்வேலி அமைத்து மணல் திருட்டு நடப்பதாக வழக்கு தொடரப்பட்டது. திண்டுக்கல் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பெரியம்மாபட்டியில் 187 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து மின்வேலி அமைத்து மணல் திருட்டு என புகார் தெரிவிக்கப்பட்டது.
