Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மக்கள் குறைதீர் கூட்டத்தில் தையல் இயந்திரம் வழங்கல்

ஊட்டி : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தையல் இயந்திரம் கோரி விண்ணப்பித்த நடுவட்டம் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு, நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விலையில்லா தையல் இயந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை,வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 133 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதை போட்டி,கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு முதல் பாிசாக ரூ.10 ஆயிரம்,இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம்,மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடுவட்டம் டிஆர் பஜார் பகுதியை சேர்ந்த கஜலட்சுமி என்பவர் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தார்.இதனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து அவருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

பிரதான் மந்திரி ஜன் ஜோதி ஆதிவாசி நியாய மகா அபியான் யோஜனா திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கட்டப்பட்ட 929 வீடுகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சந்திரசேகரிடம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ராதாகிருஷ்ணன்,மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிச்சாமி (நிலம்) மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.