சென்னை: பென்னிகுயிக் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணையைத் தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும்-செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: முல்லை பெரியாறு அணையை தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும்-செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க ஜான் பென்னிகுயிக் அவர்களது புகழ். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement