Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் இருந்து புறப்பட்ட கோலாலம்பூர் விமானத்தில் மலேசிய பயணி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் மலேசியா நாட்டு பயணி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 188 பயணிகளுடன், நேற்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த மலேசியா நாட்டு குடியுரிமை பெற்ற இந்தியரான சிவசுப்பிரமணியம் சோமு (65) என்பவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு துடி துடித்தார். இதையடுத்து விமானம் அவசரம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.

சென்னையில் தயாராக இருந்த விமான நிலைய மருத்துவ குழுவினர், சிவசுப்பிரமணியம் சோமுவை பரிசோதனை செய்தனர். அதில், அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை விமான நிலைய போலீசார் சிவசுப்பிரமணியம் சோமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் பயணிகளுடன் 2 மணிநேரம் தாமதமாக கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது. நடுவானில் பயணி உயிரிழந்த சம்பவம், விமான பயணம் மேற்கொண்டவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.