Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஐ.நா. அமைப்பின் மாணவர் கல்விப் பயணத் திட்டத்தின் கீழ், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில், வரும் ஆகஸ்ட் 7,8 தேதிகளில் பன்னாட்டு மாணவர் மன்றத்தில், நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 6 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் 8 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். அது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.