Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: தமிழக எம்.பி.க்களின் முக்கிய கேள்விகள்

1.ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன?- திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி. கேள்வி

நாட்டில் அதிகரித்து வரும் ரேபிஸ் மரணங்கள் மற்றும் ரேபிஸினால் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் ஆபத்து குறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி. மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். நாய்க்கடிக்கு பிறகான சிகிச்சை வசதிகளை வலுப்படுத்தவும், ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோகுளோபுலின் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ரேபிஸைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிப் பொருட்களுடன் ஏதேனும் சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

2.பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நேபாளத்தில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்ன?-தேனி தங்க தமிழ்செல்வன் எம்.பி., கோவை கணபதி ராஜ்குமார் எம்.பி. கேள்வி

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட உள்நாட்டு புரட்சி காரணமாக, அங்கு மருத்துவம் படிக்கும் பல இந்திய மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களின் படிப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என திமுக மக்களவை உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.நேபாளத்தில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களை இந்திய தேசிய மருத்துவ ஆணையம் (ழிவிசி) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படுவார்களா? இந்த மாணவர்கள் மருத்துவ படிப்பு முடிப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

3.அங்கன்வாடிகளை தொடக்கப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தின் செயல்பாடுகள் என்ன?-சேலம் செல்வகணபதி எம்.பி.

11 லட்சம் அங்கன்வாடி மையங்களை (கிகீசிs) தொடக்கப் பள்ளிகளின் வளாகத்தில் இணைக்கும் திட்டம் குறித்து சேலம் மக்களவை உறுப்பினர் செல்வகணபதி கேள்வி எழுப்பியுள்ளார். கிட்டத்தட்ட 2.9 லட்சம் அங்கன்வாடிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் 9.16 லட்சம் 1 ஆம் வகுப்பு உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் அரசு எடுத்துள்ள முடிவின் தற்போதைய நிலை என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

4.எப்போது முடியும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்?- வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி. கேள்வி

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை ஒன்றிய அரசு மொத்தமாக கைவிட்டுவிட்டதா என மக்களவையில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (யிமிசிகி) மற்றும் ஒன்றிய அரசு வழங்கிய நிதியின் அளவு, யிமிசிகி யிடமிருந்து நிதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள், மதுரையில் உள்ள கிறீறீவிஷி கட்டுமானத்திற்காக இதுவரை செலவிடப்பட்ட நிதியின் அளவு மற்றும் அதன் கட்டுமானப் பணிகள் முடிவடைய தேவைப்படும் காலம் எவ்வளவு எனும் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.

5.தற்கொலையிலிருந்து மாணவர்களை காக்க நடவடிக்கை என்ன?- பொள்ளாச்சி ஈஸ்வரசாமி எம்.பி. கேள்வி

நாட்டில் நிகழும் மொத்த தற்கொலைகளில் 7.6% பேர் மாணவர்கள் என்பதை குறிப்பிட்டு இளைஞர்களின் மனநலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிய அரசின் செயல்திட்டம் என்ன என மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்ட மனநலத் திட்டத்தின்கீழ் (ஞிவிபிறி) சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்ன? செயலில் உள்ள மாணவர் மனநலத் திட்டங்கள்/கூறுகளை செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகளின் எண்ணிக்கை என்ன? ஆலோசனை அமர்வுகள், பரிந்துரைகள் மற்றும் மாணவர் மனநலத்திற்கான வள ஒதுக்கீடு உட்பட ஞிவிபிறி இன் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன? மாணவர் தற்கொலைகளைக் குறைப்பதில் ஞிவிபிறி இன் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட மதிப்பாய்வு அல்லது தணிக்கைகளின் விவரங்கள் மற்றும் அதன் முடிவுகள் என்ன என்று அவர் கேட்டுள்ளார்.

6.தமிழ்நாடு மருத்துவதுறையில் தனது பங்களிப்பை மறுக்கிறதா ஒன்றிய அரசு?- பெரம்பலூர் அருண் நேரு எம்.பி

கடந்த மூன்று நிதியாண்டுகளில் தேசிய சுகாதார இயக்கத்தின் (ழிபிவி) கீழ் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட மொத்த உதவித் தொகையின் விவரங்கள் குறித்து பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானம் நிறைவுறாததை குறிப்பிட்டும் 2021 முதல் ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்த ஒன்றிய அரசு அளித்துள்ள நிதி குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

7.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இணையத்தில் பாதுகாப்பை உறுதி செய்க!- தஞ்சாவூர் முரசொலி எம்.பி.

இணையத்தின் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பின்மையில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் நடைமுறைகள் குறித்து மக்களவையில் முரசொலி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். போலி/அவதூறு செய்யும் பயனர்கள்/சைபர் குற்றவாளிகளை எளிதாகக் கண்காணிக்க, தனியுரிமையை சமரசம் செய்யாமல் சமூக ஊடக கணக்குகளை ஆதார் அடிப்படையில் உருவாக்கும் திட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? ஆன்லைன் துன்புறுத்தலைத் தடுக்க, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பாதுகாப்பை உறுதி செய்ய/பொறுப்பான/நேர்மறையான டிஜிட்டல் நடத்தையை ஊக்குவிக்க, சமூக ஊடக தளங்களுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

8.டெல்டா நெற்பயிர் விவசாயிகளின் நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன?- எம்.பி. பி. வில்சன் கேள்வி

தமிழ்நாட்டில் அதிகப்படியான மழைப்பொழிவு காரணமாக நெல் பயிர்களில் அதிக ஈரப்பதத்திற்கு வழிவகுத்ததைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து சீரான கொள்முதல் செய்ய நெல்லுக்கான அனுமதிக்கப்பட்ட ஈரப்பத வரம்பை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாலும், கூழ் தயாரிக்கும் தொழில்களின் தேவை இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு றிவி-கிகிஷிபிகி (விவசாயி வருமான பாதுகாப்புத் திட்டம்) இன் கீழ் சந்தை தலையீட்டுத் திட்டத்தை (விமிஷி) செயல்படுத்தவும், இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசு கோரிக்கைக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன?

9.உணவு பதப்படுத்தும் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குக- ராஜாத்தி சல்மா எம்.பி.

நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பதில் உணவு பதப்படுத்தும் துறையின் திறன் குறித்து ஒன்றிய அரசு நடத்தியுள்ள ஆய்வுகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட உணவு பதப்படுத்தும் துறையில் பெண்கள், பட்டியல் வகுப்பினர் (ஷிசி), பட்டியல் பழங்குடியினர் (ஷிஜி), மற்றும் சிறுபான்மை சமூகத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

10.விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே பாலங்களை ஆய்வு செய்திடுக!-ஆர். கிரிராஜன் எம்.பி.

இரயில்வே துறையில் விபத்துக்களை முற்றிலுமாக குறைக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதா என ஆர். கிரிராஜன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ரயில்வே பாலங்களின் மொத்த எண்ணிக்கை என்ன? நாடு முழுவதும் உள்ள ரயில்வே பாலங்களில் நிலைத்தன்மை மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு தணிக்கைகளை நடத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் கேட்டுள்ளார்.