Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரமத்திவேலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற பேருந்து சேலம், கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளது. அதிகாலை 3மணி அளவில் பரமத்தி அடுத்து ராசாம்பாளையம் டோல் கேட்டை கடந்து சென்று இருக்கிறது. அதில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கிராமுடு அருகே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்துகள் அணுகு சாலையில் திருப்பிவிடப்பட்டது

அந்த இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பக்கத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகள் உள்ளானது. இந்த பேருந்து 14 பயணிகள் உட்பட 18 பேர் வந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 7 பேரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். மிதமுள்ள 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.