மதுரை: வணிக வளாகம் கட்ட நகர அமைப்பு துறையிடம் முறையான அனுமதி பெற்றவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒன்றிய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் எதுவாயினும் மேம்பாட்டு கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என கூறியுள்ளது. கட்டடங்கள் தொடர்பான வழக்குகள் முடியும் வரை கடைகளை ஏலம் விடும் அறிவிப்புக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. வழக்கு தொடர்பாக பரமக்குடி நகராட்சி ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 13க்கு ஒத்திவைத்துள்ளது.
+
Advertisement


