சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. துறையூரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதிமுகவினர் தாக்கியதில் காயமடைந்ததாக கூறப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரச்சாரத்துக்கு வந்த நபர் மயங்கியதால் ஆம்புலன்ஸ் வருமாறு அழைப்பு வந்ததாக ஓட்டுநர் தகவல் தெரிவித்தார்.
+
Advertisement