Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியாவால் உருவாக்க முடிந்தால்... பாகிஸ்தான் முழுவதும் பிரம்மோஸ் ஏவுகணை எல்லைக்குள் உள்ளது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

லக்னோ:பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் இருக்கின்றன என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு முன்னோட்டம் தான் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். உபி மாநிலம், லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணையின் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை உற்பத்தி மையத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைகளை ராணுவத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டு முதலாவது தொகுப்பு ஏவுகணைகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில், அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரமோஸ் என்பது ஒரு ஏவுகணை மட்டுமல்ல, அது இந்தியாவின் மூலோபாய நம்பிக்கையின் சான்றாகும். ராணுவம் முதல் கடற்படை மற்றும் விமானப்படை வரை, அது நமது பாதுகாப்புப் படைகளின் முக்கிய தூணாக மாறியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் திறன்கள் இப்போது ஒரு சக்திவாய்ந்த தடுப்பாகச் செயல்படுகின்றன.

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரெய்லர். இந்தியாவால், பாகிஸ்தானை உருவாக்க முடிந்தால், நேரம் வந்தால்... நான் அதிகம் சொல்லத் தேவையில்லை, நீங்கள் அனைவரும் போதுமான அளவு புத்திசாலிகள். வெற்றி என்பது நமக்கு ஒரு சிறிய சம்பவம் மட்டுமல்ல, அது ஒரு பழக்கமாகிவிட்டது என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்தது. இது இந்தியர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. உலகிற்கு பிரம்மோஸின் செயல்திறனை நிரூபித்தது. இவ்வாறு அவர் பேசினார்.