Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓவிய, சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்த, வாழ்வாதாரத்தை உயர்த்த சென்னையில் "ஓவியச் சந்தை"

சென்னை: ஓவிய, சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்த, வாழ்வாதாரத்தை உயர்த்த சென்னையில் "ஓவியச் சந்தை" நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், சென்னையில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையின் அடிப்படையில் சென்னையில், 2025 செப்டம்பர் திங்களில் 3 நாட்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டம் செயல்படுத்திட கலை பண்பாட்டுத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் இத்திட்டத்தில் பயன்பெற ஏதுவாக, தாங்கள் காட்சிப்படுத்தி, விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ள கலைப்படைப்புகளின் விவரங்கள், அதற்குரிய புகைப்படங்கள், கலைப் படைப்புகளின் விற்பனை தொகை ஆகிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை செப்.15க்குள், பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.