Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசு சார்பில் குழு அமைப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பருவமழையால் மழையில் நெல் நனைந்துள்ளதால் ஈரப்பத அளவை 17%லிருந்து 22%ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பருவமழை காலம் என்பதால் 17% ஈரப்பத அளவில் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து 3 குழுக்களை ஒன்றிய அரசு அனுப்பியது.

ஒன்றிய உணவுத்துறை துணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 குழுவிலும் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குழுக்கள் ஆய்வு செய்து நெல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளும். ஒன்றிய அரசின் குழுக்கள் உடனே தமிழ்நாடு வந்து நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.