நெல் கொள்முதலில் தற்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
சென்னை: நெல் கொள்முதலில் தற்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ.214 கோடியில் குறுவை தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மழை பெய்வது இயற்கையாக நிகழ்வது ஒன்று; நெல் விளைந்த பிறகே அறுவடை செய்ய முடியும். நெல்லுக்கு அதிக விலை தரப்படுவதால் கடந்த ஆண்டைவிட 3 மடங்கு நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


