Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

படையாண்ட மாவீரா படத்தில் வீரப்பனின் படம் பயன்படுத்த தடை கோரி மனைவி வழக்கு: தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வீரப்பன் படத்தை பயன்படுத்தியதாக கூறி படையாண்ட மாவீரா என்ற படத்திற்கு தடை விதிக்க கோரி வீரப்பனின் மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சமி தாக்கல் செய்த மனுவில், ‘படையாண்ட மாவீரா என்ற படத்தின் போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், எனது கணவர் வீரப்பனின் உண்மையாக உருவம் உள்ளது. அதே மீசை வைத்த நபர் உள்ளார். பார்ப்பதற்கு எனது கணவர் புகைப்பட்டத்தை தான் சித்தரிக்கிறது. எனது கணவரின் படத்தை பயன்படுத்துவதற்கு முன்பு என்னிடம் சட்டப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால், என்னிடம் அனுமதி பெறாமல் எனது கணவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டு இருக்கும் என்று கருதுகிறோம்.

இதனால் எனது கணவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, இந்த படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனமான வி.கே.புரொடக்‌ஷன் நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தத.

அப்போது வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சார்பாக வக்கீல் சுவேதா ஸ்ரீதர் ஆஜராகி, படம் வெளியிட தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மனுதாரருக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படும். மனுதாரர் கணவரின் புகழுக்கு களங்கம் ஏற்படும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 26ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.