Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் ஜவுளித்துறைக்கு பாதிப்பு; ஒன்றிய அரசு எவ்வித கொள்கையையும் வகுக்காததால் தொழிலாளர்கள் தவிப்பு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அெமரிக்காவின் 50% வரி விதிப்பின் விளைவாக ஜவுளித் துறைக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை சமாளிக்க மானியம், வரி சலுகைகள் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது குறித்த கொள்கை எதையும் ஒன்றிய அரசு இதுவரை வகுக்காதது தொழிலதிபர்கள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாட்டின் ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஈடுகட்டும் வகையிலும், மானியம், வரி விலக்கு சலுகைகள் ஆகியவை அடங்கிய உதவித் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்.