டெல்லி: செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓபன் ஏஐ நிறுவனம் இந்திய பயணர்களுக்கு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இதன் மேம்பட்ட சாந்த சேவையான ChatGPT Go இந்தியாவில் உள்ள அனைத்து பயணர்களுக்கும் ஒரு வருட காலத்திற்கு முற்றிம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் தொழில்நுட்ப தலைநகரான பெங்களுருவில் நவம்பர் 4 அன்று நடைபெற்ற ஓபன் ஏஐ முதல் தேவதே எக்ஸ்சேஞ்ச் நிகழ்வை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜிபிடி5 மாடலை கொண்டு இயங்கும் ChatGPT Go முன்பு மாதம் 399 கட்டணத்தில் இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் பயணர்கள் அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் அதிக தினசரி படம் உருவகங்கள், பெரியளவிலான படங்கள் பதிவேற்றங்கள் வசதி மற்றும் நீடிக்கப்பட்ட நினைவாக திறன் ஆகிய மேம்பட்ட அம்சங்களை பெற முடியும். ChatGPT Go பயணர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்திய இரண்டாவது பெரிய சந்தையாக விளங்குகிறது.
இந்த இலவச அணுகள் ஓபன் ஏஐ இந்தியாவுக்கு முதல் இடம் என்ற அணுக முறையில் ஒரு பகுதியாகும். பெரு நகரங்களை தாண்டி இந்தியாவின் பறந்த டிஜிட்டல் சமூகத்திற்கும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவையும், பயன்பாட்டையும் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கம். இது ஒன்றிய அரசின் இந்திய ஏஐ மிஷின் திட்டத்துடனும் ஒத்து போகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தில் துணை தலைவரும், ChatGPT தலைவருமான நிக் கூறுகையில், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவின் பயன்களை இன்னும் அதிகமான மக்கள் எளிதில் பெறுவதற்கு இந்த இலவச திட்டத்தை அறிவிக்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்த பிரத்தியேக சலுகை நவம்பர் 4 முதல் புதிதாக இணையும் பயனர்களுக்கு தொடங்குகிறது. இதன் முக்கியமான அம்சமாக ஏற்கனவே ChatGPT Go சந்தா செலுத்தி வரும் இந்திய பயணர்களுக்கும் இந்த 12மாத இலவசகாலம் பொருந்தும் என்றும் ஓபன் ஏஐ உறுதி அளித்திருந்தது. இது குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து பெர்ப்ளக்சிட்டி ஏஐ இலவச சேவை வழங்கிவரும் நிலையில், ஓபன் ஏஐ இந்த நடவடிக்கை இந்தியாவின் ஏஐ சந்தையில் மேலும் போட்டியை தீவிர படுத்தியுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கருது தெரிவித்துள்ளனர்.
