Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டியில் பின் தொடர்ந்து தொல்லை காரில் லிப்ட் தருவதாக இளம்பெண்ணுக்கு டார்ச்சர்

*வியாபாரி கைது

ஊட்டி : ஊட்டியில் காரில் லிப்ட் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து கட்டாயப்படுத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தட்டனேரியை சேர்ந்தவர் நவநீதன் (39). வியாபாரி. இவரது பக்கத்து கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணை இவர் பின் தொடர்ந்துள்ளார். இளம்பெண்ணுக்கு கணவர், குழந்தைகள் உள்ளனர்.

ஊட்டியில் உள்ள தனியார் நிறுவன ஊழியராக இளம்பெண் வேலை முடிந்து வீட்டிற்கு வர சரிவர பஸ் வசதி இல்லாததால் கல்லட்டி சாலையில் நடந்து ஊட்டி வந்து அதன் பின்னர் வீடு திரும்புவார். இந்நிலையில் இளம்பெண்ணை பின் தொடர்ந்த நவநீதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று செல்போன் எண்ணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் கண்டித்ததால் நவநீதன் திரும்பினார்.

அதன் பின்னர் இளம்பெண்ணை நவநீதன் சுற்றி சுற்றி வந்துள்ளார். இதனை கணவரிடம் தெரிவித்தால் வேலையை விட்டு நிறுத்திவிடுவோர் என்று அஞ்சிய இளம்பெண் அதனை தவிர்த்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஊட்டி பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த நவநீதன் லிப்ட் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்தார்.

இதில் ஆத்திரமடைந்த நவநீதன் இளம்பெண்ணை வலுக்கட்டாயகமாக கையை பிடித்து இழுத்து லிப்ட் தருவதாக தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறி சத்தம்போட்டார். பொதுமக்கள் உதவிக்கு ஓடி வந்தனர். இதனையடுத்து நவநீதன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து இளம்பெண் ஊட்டி புதுமந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன் நவநீதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.