சென்னை: கேரளாவில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் நாளை மறுநாள் கொண்டாட படவுள்ள நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் உள்ள அன்னை வேளாங்கன்னி பள்ளியில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளி குழந்தைகள் செண்டை மேளத்துக்கு கதகளி ஆடியது அனைவரின் கவனத்தையம் ஈர்த்தது. இதை போன்று ஆவடி, புதுவண்ணாரப்பேட்டை, பழனியில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.