Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, போலீசார் தடுத்ததால் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; உமர் அப்துல்லாவுக்கு நடந்தது, மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய அனைவரும் ஒருமித்த குரலில் இதனை கண்டிக்க வேண்டும். காஷ்மீர்-தமிழ்நாடு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை பாஜக அரசு திட்டமிட்டே பறிக்கிறது. மாநில அந்தஸ்து கோரும் நிலையில், அங்கு நிலைமை எவ்வளவு மோசம் என்பதை விளக்குகிறது. சுவர் ஏறிகுதித்து உமர் அப்துல்லா சென்றார்; தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை இப்படியா நடத்துவது?. தியாகிகளுக்கு மரியாதை செலுத்த கூடாது என்பதற்காகவே வீட்டு காவலில் ஒரு முதல்வர் வைக்கப்பட்டுள்ளார். உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது, ஜம்மு-காஷ்மீரில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.