மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் நீர்வரத்து 700 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 300 கனஅடியாக சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 436 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 107.85 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 107.79 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 75.30 டிஎம்சியாக உள்ளது.
Advertisement