Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அக்டோபர் 16 முதல் 18க்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அக்டோபர் 16 முதல் 18-க்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; தென்மாவட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. இயல்பைவிட வடமாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 44 செ.மீ. மழை பதிவாவது வழக்கம். நடப்பாண்டில் 50 செ.மீ. வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.