Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

‘‘மாஸ் காட்டி சாவடிக்கலாமா? ’’ விஜய் கொடுக்கும் பிச்சைக்காசு எதுக்கு? உறவுகளை இழந்தோர் ஆவேசம்

கரூர்: கரூர் நெரிசலில் உறவினர்களை இழந்தோர் ஆவேச பேட்டி அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்,‘‘என் கூட பிறந்தவன் உயிர் போச்சே... உயிரை தருவார்களா. அவர் (விஜய்) போடுகிற பிச்சைக்காசு உங்களுக்கு பெருசா. இத்தனை உயிர் போய் கிடக்கிறது. அவரால என்ன செய்ய முடியும். இனி அடுத்த ஊருக்கு எந்த மொகரையை வைத்து போவார். அவர் மாநாட்டிற்கே போயிருக்க கூடாது. இவர் போய் சொகுசா படுத்திருக்கார் ஏசியில். நாங்கள் இங்கு வீதியில் கிடக்கிறோம். எங்க குடும்பத்தை நீங்க பார்ப்பீங்களா என்று ஆவேசமாக கூறினார்.

மற்றொருவர் கூறுகையில்,‘‘அரசியல் பண்ணுங்க... வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்காக கூட்டத்தைக் கூட்டி இது மாதிரி நெருக்கடி பண்ணி மற்றவர்களுக்கு மாஸ் காட்டி இருக்கிறவர்களை சாவடிக்கலாமா. 8.45 மணிக்கு நாமக்கல் வர சொல்லிருங்காங்க. அந்த நேரத்துக்கு சென்னையில் இருந்து கிளம்பினால் என்ன அர்த்தம். அப்ப கூட்டம் கூடட்டும். நெருக்கடி பண்ணி சாகட்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்க டயத்துக்கு வந்திருந்தால் இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்காது என்றார். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கத்துடன் விஜய்யை தாக்கி பேசினர்.