Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகிம்சை எனும் அறக்கொள்கை மூலம் சுதந்திரத்தை வலுப்பெற செய்தவர் காந்தியடிகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் டிவிட்

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய விடுதலையில் அகிம்சை என்பதொரு அறக்கொள்கையை முன்னிறுத்தி, அதன் மூலம், சுதந்திரத்திற்கான போராட்டங்களை வலுப்பெற செய்தவர் காந்தியடிகள். உப்பு சத்தியாகிரகம் போன்ற வரலாற்றில் இருந்து நீங்காத பல வலிமையான அகிம்சை வழி போராட்டங்கள் மூலம், நாட்டின் சுதந்திரத்தில் பெரும் பங்காற்றிய காந்தியடிகளின் பிறந்த தினத்தில், அவருடைய தியாகங்களைப் போற்றி வணங்கிடுவோம்.