Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், கடந்த 1989ம் ஆண்டு முதல் முதலாக உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய சுசுமு கிடகவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம்.யாகி ஆகியோர் நோபல் பரிசை பெறுகின்றனர். உலோக கரிம கட்டமைப்பு என்பது உலோக அணுக்களையும் கரிம மூலக்கூறுகளையும் இணைத்து உருவாக்கப்படும் முப்பரிமாண கட்டமைப்பு.

இது வாயுக்களை பிடித்து வைக்கவும், சேமிக்கவும், கடத்தவும் உதவுகிறது. சுசுமு கிடகவா ஜப்பானில் உள்ள க்யோடோ பல்கலைக்கழகத்திலும், ரிச்சர்ட் ராப்சன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஒமர் எம்.யாகி அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களாக உள்ளனர். இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசும், நாளை அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசில் இம்முறை அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் உள்ளிட்ட 338 போட்டியாளர்கள் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.