Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தோல்வி; அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது: அதிபர் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது. அமெரிக்கா இப்போது ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது என நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மியாமியில் கூட்டம் நடந்தது.

இதில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்க மக்கள் ஒரு வருடத்திற்கு முன்பு என்னை தேர்ந்தெடுத்ததன் மூலம் இறையாண்மையை மீட்டெடுத்தனர். தற்போது நியூயார்க்கில் நாங்கள் சிறிது இறையாண்மையை இழந்தோம். நாங்கள் அதையும் எதிர்கொள்வோம். தனது நிர்வாகம் ஒரு பொருளாதார அதிசயத்தை நிகழ்த்தி வரும் அதே வேளையில், தனது எதிர்ப்பாளர்கள் சட்டவிரோத வெளிநாட்டினருக்கும் அதிக செலவினங்களை விரும்புகிறார்கள்.

நாங்கள் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களுக்கு அதிக சம்பளத்தை விரும்புகிறோம். கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், சோசலிஸ்டுகள் மற்றும் உலகமயமாக்கல்வாதிகள் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேரழிவை தவிர வேறு எதையும் வழங்கவில்லை. இப்போது நியூயார்க்கில் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி செய்கிறார் என்பதைப் பார்ப்போம். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.