Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேளாண் இளங்கலை படிப்புகளுக்கு புதிய நுழைவுத் தேர்வு

மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான 20% இடங்கள் இப்போது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தொடர்பான இளங்கலைப் படிப்புகள் உள்ளன. இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் விவசாயம் தொடர்பான படிப்புகளுக்கு மொத்தம் 6,921 இடங்கள் உள்ளன. இவை ஆலோசனை மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான 20% இடங்கள் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சேர, 12ஆம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மை போன்ற அறிவியல் தொடர்பான பாடங்களைப் படித்திருக்க வேண்டும். ஒருவர் விரும்பும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் நுழைவுத் தேர்வுகளை அடையாளம் கண்டு பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை உரிய தேதிக்குள் சமர்ப்பித்த பிறகு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உட்பட இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்த பல்கலைக்கழகங்களில் வேளாண்மை மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் பல்வேறு இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு பயன்படுத்தப்படுகிறது. மற்ற பல்கலைக்கழகங்கள் வழங்கும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுக்குத் தயாராக வேண்டும். நுழைவுத் தேர்வு மற்றும் கல்வித் திறனை அடிப்படை யாகக் கொண்டு சேர்க்கைக்கான தேர்வு செயல்முறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.