Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி தலைநகர் காத்மாண்டில் இளைஞர்கள் போராட்டம்..!!

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. நேற்று போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் பலியான நிலையில், 300 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தினர். மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து நேற்று இரவு சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்குவதாக பிரதமர் அறிவித்தார்.

நேபாள உள்துறை அமைச்சர் பதவி விலகினால் போதாது, பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இளைஞர்கள் போராட்டம் காரணமாக நேபாளத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகினார். இந்த நிலையில், இன்றைய தினம் நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டுள்ளனர். நேபாள நாடாளுமன்றத்துக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கிய பிறகும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.