* கஸ்தூரி மஞ்சள் பொடியை பாலில் கலந்து குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டினால் குழந்தைகளுக்கு சரும நோய்கள் ஏற்படாது.
* செம்பருத்தி இலையை தலையில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்க கேஷம் ஆரோக்கியம் பெறும்.
* ஷாம்பு தேய்த்துக் குளிப்பவர்கள் அதை அப்படியே தலையில் தேய்க்கக் கூடாது. சிறிது நீரில் கலந்து தேய்க்க வேண்டும்.
* எலுமிச்சை பழச்சாறும், ஆரஞ்சு பழச்சாறும் கலந்து கண்ணை சுற்றியுள்ள கருவளையத்தில் பூசினால் மாறும்.
*வெள்ளரிக்காய் சாற்றை கண்ணைச் சுற்றி இருக்கும் கருவளையம் பகுதியில் தேய்த்தால் கருமை நீங்கும்.
* தயிர், கடலைமாவு இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம். முக அழகு மெருகு ஏறும்.
* பீட்ரூட் சாறை உதடுகளில் பூசி வர, கருப்பான உதடுகள் நாளடைவில் சிவப்பு நிரத்தை பெற்று தரும்.
* புதினா இலையை காய வைத்து, இடித்து தூளாக்கி அந்த தூளால் பல் துலக்கி வந்தால் பற்கள் பளிச்சிடும்.
* பசும் பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவில் படுக்கச் செல்லும் முன் முகத்தை கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறையும்.
* சிறு கீரையை தினமும் சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் உடல் அழகையும், முகத்திற்கு பொலிவையும் தந்து பளபளக்கச் செய்யும்.
* குளிக்கும் நீரில் எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு விட்டு குளித்தால் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.
* கூந்தல் நனைந்த நிலையில் இருக்கும் போது சீவக் கூடாது. சீவினால் முடி சிதைந்து விடும்.
* தலைக்கு பயன் படுத்தும் எண்ணெய்யை அடிக்கடி மாற்றக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயில் ‘நீல அமரியை’ இடித்து சாராக்கி சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
- விமலா
சடையப்பன்.
