Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனுமதியின்றி தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தத்கூடாது: நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு!!

டெல்லி: அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியாவின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல வலைத்தளங்கள் தனது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதாகவும், AI-யால் உருவாக்கப்பட்ட அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும், டி சர்ட், பாத்திரங்கள், ஜாரில் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படம் பயன்படுத்துவதாகவும்,

இதுதொடர்பாக இணையதளங்கள் அதிகளவில் பெருகி இருப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அத்தகைய அங்கீகாரம் இல்லாத போதிலும், அவரது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்யும் ஏராளமான வலைத்தளங்களை எடுத்துக்காட்டினார். இதனை பதிவு செய்து கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், பல்வேறு நோக்கங்களுக்காக நடிகரின் படங்களை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தும் வலைத்தளங்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பிப்பதாக உறுதியளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 18ம் தேதி ஒத்திவைத்தார்.