சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் செப் .30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்பநல நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக கூறி விவகாரத்து கேட்டுள்ளனர். வழக்கில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
+
Advertisement