தவறான திசையில் பள்ளிச் சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், எம்.பி. அலுவலக ஊழியர் உயிரிழப்பு
சென்னை: சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் தவறான திசையில் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்துள்ளார். பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சுரேஷ் (50) ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின் முகாம் அலுவலகத்தில் ஓட்டுநராக உள்ளார்.


